Pattukottai Accident : அரசு பேருந்து மோதி அதிமுக கவுன்சிலரின் கணவர் பலி!
பட்டுக்கோட்டையில் சாலை விபத்தில் அதிமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை : பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாத்திகோட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (64). இவரது மனைவி அமிர்தவள்ளி திருவோணம் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில், கோவிந்தராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பெரியதம்பி ஆகியோர் இன்று காலை பட்டுக்கோட்டையில் இருந்து முத்துப்பேட்டை செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே பட்டுக்கோட்டை - நாகை சாலையை கடக்க முயன்ற போது, அவர்களது இருசக்கர வாகனம் மீது வேதாரண்யம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், பெரியதம்பி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த பட்டுக்கோட்டை டவுன் போலீசார், கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.