திருவள்ளூர் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
”நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாததாலும், பாதாளச் சாக்கடை வழியாகச் செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாலும் நகராட்சி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளது”

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசின் ஸ்டாலின் மாடல் அரசையும், திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, அஇஅதிமுக சார்பில், திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த விவரங்கள்
வரும் ஜூன் 16ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் எதிரில் இந்த ஆர்ப்பட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்கள்
ஆளும் தி.மு.க. அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி, கடந்த நான்கு ஆண்டுகளாக மக்களைப் பல்வேறு வழிகளில் துயரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.