தருமபுரியில் அமைச்சர் ராஜேந்திரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்வி! திமுகவினர் மிரட்டல்! போலீஸ் மூலம் கைது!
”கோவிந்தசாமியின் கேள்விகளைத் தொடர்ந்து, அரூரிலிருந்து கலந்துகொண்ட அதிமுக எம்.எல்.ஏ. சம்பத்குமாரும் ஆதரவாக பேசினார். இதன்போது, அருகே இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கூச்சலிடத் தொடங்கினர். அவர்கள் மேசைகளின் மீது ஏறி, இரு எம்.எல்.ஏ.க்களையும் வெளியேறுமாறு கோஷமிட்டனர்”

தருமபுரியில் அமைச்சர் ராஜேந்திரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் சரமாரி கேள்வி! திமுகவினர் மிரட்டல்! போலீஸ் மூலம் கைது!
தருமபுரியில் ஆய்வுக்கு சென்ற சுற்றுலா துறை அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் கேள்வி எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்களை திமுகவினர் சூழ்ந்து கொண்ட நிலையில் 2 எம்.எல்.ஏக்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று காலை நடைபெற்ற ஆய்வு மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர்களான கோவிந்தசாமி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பினர்.