தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Aiadmk Member Murder 5 Arrested Including Boy In Chennai

அதிமுக பிரமுகர் கொலை - சிறுவன் உட்பட 5 பேர் கைது.. 5 பட்டா கத்திகள் பறிமுதல்!

Divya Sekar HT Tamil
Mar 28, 2023 08:52 AM IST

Chennai Murder : பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக பிரமுகர் கொலை
அதிமுக பிரமுகர் கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பியம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளங்கோவன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த , சஞ்சய் (19), கணேசன் (23), வெங்கடேசன் (30), அருண்குமார் (28), சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். 

அவர்களிடமிருந்து ஒரு ஆட்டோ, 5 பட்டாக்கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்