‘இணையத்தில் இலையின் குரல்’ மதுரையில் இன்று டிஜிட்டல் திறமையாளர்களை தேடும் நிகழ்வு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘இணையத்தில் இலையின் குரல்’ மதுரையில் இன்று டிஜிட்டல் திறமையாளர்களை தேடும் நிகழ்வு!

‘இணையத்தில் இலையின் குரல்’ மதுரையில் இன்று டிஜிட்டல் திறமையாளர்களை தேடும் நிகழ்வு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 20, 2025 10:58 AM IST

மண்டல வாரியாக நடைபெற உள்ள இந்த திறமையாளர்கள் கண்டறியும் நிகழ்வில், 82 கட்சி மாவட்டங்களுக்குமான டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

‘இணையத்தில் இலையின் குரல்’ மதுரையில் இன்று டிஜிட்டல் திறமையாளர்களை தேடும் நிகழ்வு!
‘இணையத்தில் இலையின் குரல்’ மதுரையில் இன்று டிஜிட்டல் திறமையாளர்களை தேடும் நிகழ்வு!

இந்த மாடல் நிகழ்வில், அஇஅதிமுக துணைப் பொதுச்செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விஸ்வநாதன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர், திருப்பங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. ராஜன் செல்லப்பா, தேனி மேற்கு மாவட்டச் செயலாளர் STK ஜக்கையன், தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை MP இராமர், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் P பெரியபுள்ளான் (எ) செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

மண்டல வாரியாக நடைபெற உள்ள இந்த திறமையாளர்கள் கண்டறியும் நிகழ்வில், 82 கட்சி மாவட்டங்களுக்குமான டிஜிட்டல் செய்தித் தொடர்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, 71 கன்டண்ட் படைப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஆளுங்கட்சி திமுகவைச் சேர்ந்தவர்கள் 63 ஆயிரத்து 124 ஆயிரம் பொய்களை அள்ளி வீசினாலும், அத்தனைப் பொய்களையும் தகர்த்தெறிந்து, "தமிழ்நாட்டின் ஒற்றை எதிரி திமுக தான்" என்ற உண்மையை கட்சியின் சார்பில் திடமாக வாதிட வல்ல "Digital Debate Panelist"களை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த நிகழ்வில் தேர்வுகள் நடைபெற உள்ளன என்று அதன் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இணையத்தில் பலமான அணியை கட்டமைக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தான், இந்த முயற்சியை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது.

இது போன்ற தேர்வுகளில் தேர்வாகும் இளைஞர்களை வைத்து, வரும் சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.