‘அறிவாலய கேட் கீப்பர்..’ திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கடுமையாக சாடிய அதிமுக ஐடி விங்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘அறிவாலய கேட் கீப்பர்..’ திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கடுமையாக சாடிய அதிமுக ஐடி விங்!

‘அறிவாலய கேட் கீப்பர்..’ திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கடுமையாக சாடிய அதிமுக ஐடி விங்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 05, 2025 07:37 PM IST

திமுக தரப்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், இன்று காலை அறிக்கை ஒன்றை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

‘அறிவாலய கேட் கீப்பர்..’ திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கடுமையாக சாடிய அதிமுக ஐடி விங்!
‘அறிவாலய கேட் கீப்பர்..’ திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கடுமையாக சாடிய அதிமுக ஐடி விங்!

எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனம்

பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதற்கு எதிர்வினையாற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும் போது, அறிவாலயத்தில் ரைடு நடத்தி, திமுகவை கூட்டணிக்கு சம்மதிக்க வைத்து, அதிக சீட்டுகளை வாங்கியது’ என்று விமர்சித்தார்.

இதைத் தொடர்ந்து, திமுக தரப்பில் அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், இன்று காலை அறிக்கை ஒன்றை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், ‘’திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது’’ எனப் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

ஆர்.எஸ்.பாரதி வைத்த விமர்சனம்

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜக-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?’’ என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். மேலும் பல தரவுகளை கூறி, கேள்வி எழுப்பிருந்தார்.

அதிமுக ஐடி விங்க் எதிர்வினை

அதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுக ஐடி விங் சார்பில், ஆர்.எஸ்.பாரதிக்கு, அவரது மொழியிலேயே பதிலடி அளித்திருக்கிறது. அவர்களின் எக்ஸ் தள பதிவில், அறிவாலய "கேட்-கீப்பர்" அறிக்கை விடுவதற்கு முன், முரசொலி தவிர மற்ற பேப்பர்களையும் படிக்கவும்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டு, திமுக தலைமையகமான அறிவாலயத்தின் வெளியே, ஆர்.எஸ்.பாரதி முரசொலி படிப்பதைப் போன்ற கார்ட்டூன் உருவாக்கி, அதையும் பதிவு செய்துள்ளனர்.