ஈபிஎஸ் குறித்து அவதூறு கார்ட்டூன்! திமுக ஐடி விங் மீது அதிமுக ஐடி விங் காவல்துறையில் புகார்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ஈபிஎஸ் குறித்து அவதூறு கார்ட்டூன்! திமுக ஐடி விங் மீது அதிமுக ஐடி விங் காவல்துறையில் புகார்!

ஈபிஎஸ் குறித்து அவதூறு கார்ட்டூன்! திமுக ஐடி விங் மீது அதிமுக ஐடி விங் காவல்துறையில் புகார்!

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2025 01:58 PM IST

“காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவும் தயங்கமாட்டோம். அ.தி.மு.க. இளைஞர்கள் மத்தியில் இந்த கார்ட்டூன் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இருப்பினும் அ.தி.மு.க. தரம்தாழ்ந்து விமர்சிக்காது என்று ராஜ்சத்யன் தெரிவித்தார்”

ஈபிஎஸ் குறித்து அவதூறு கார்ட்டூன்! திமுக ஐடி விங் மீது அதிமுக ஐடி விங் காவல்துறையில் புகார்!
ஈபிஎஸ் குறித்து அவதூறு கார்ட்டூன்! திமுக ஐடி விங் மீது அதிமுக ஐடி விங் காவல்துறையில் புகார்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தி.மு.க. ஐ.டி. விங் அவதூறான கார்ட்டூனை வெளியிட்டதாக அ.தி.மு.க. இன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கழகங்கள், ஐ.டி. விங் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, அ.தி.மு.க. ஐ.டி. விங் செயலாளர் ராஜ் சத்யன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க. ஐ.டி. விங் வெளியிட்ட கார்ட்டூன், “மிக தரம் குறைந்த, இகழ்வான” முறையில் இருப்பதாகவும், இது அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மறைத்து, மக்களை திசை திருப்புவதற்கான “மடைமாற்று அரசியல்” என்றும் குற்றம்சாட்டினர்.

கீழடி அகழாய்வுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது உள்ளிட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் ஈ.பி.எஸ். தலைமையில் தான் மேற்கொள்ளப்பட்டன என்றும், தி.மு.க. எப்போதும் வரலாற்றைத் திரித்து தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், தங்கள் குறைகளை மறைப்பதற்காகவும், தங்கள் சாதனைகளை வெளிப்படுத்த முடியாததாலும், தி.மு.க. ஐ.டி. விங் இத்தகைய தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய ராஜ் சத்யன், இந்த விவகாரம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை தி.மு.க. ஐ.டி. விங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவும் தயங்கமாட்டோம். அ.தி.மு.க. இளைஞர்கள் மத்தியில் இந்த கார்ட்டூன் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இருப்பினும் அ.தி.மு.க. தரம்தாழ்ந்து விமர்சிக்காது என்று ராஜ்சத்யன் தெரிவித்தார்.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜ் சத்யன், கள்ளச்சாராய விவகாரம் ஒரு வருடத்திற்கு முன்பே வந்ததாகவும், அதை தி.மு.க. மறைக்க முயன்றதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், இது மக்கள் மனதில் ஒரு “மோசமான வடுவாக” பதிந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை மறைக்க தி.மு.க. மடைமாற்று அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். மக்களுக்கு இந்த உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே தாங்கள் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.