‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா?’: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக ஐடி விங்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா?’: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக ஐடி விங்

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா?’: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக ஐடி விங்

Marimuthu M HT Tamil Published Jun 11, 2025 02:12 PM IST
Marimuthu M HT Tamil
Published Jun 11, 2025 02:12 PM IST

தாம்பரம் அரசு விடுதியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு மறைவதற்குள்ளாகவே, இன்றைய தினம் காஞ்சிபுரத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அதிமுக ஐடி விங் விமர்சித்து இருக்கிறது.

‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா?’: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக ஐடி விங்
‘பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா?’: முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த அதிமுக ஐடி விங்

இதுதொடர்பாக, அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது, ‘’ தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவிகளைக் காண பெற்றோர்களுக்கு திமுக அரசு அனுமதி மறுப்பதாக செய்திகள் வருகின்றன.

எதற்காக பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது முதலமைச்சர் ஸ்டாலின்.

மாணவிகளுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத நிலை:

மாணவிகளுக்கு துளியும் பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் அரசு சேவை இல்லம் உள்ளது என்ற உண்மை தெரிந்துவிடும் என்பதாலா? அது தான் ஏற்கனவே தெரிந்துவிட்டதே?

சிசிடிவி கூட முறையாக வேலை செய்யாத அரசு இல்லத்தில் எப்படி மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்கும்?

மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய திமுக அரசு, மாறாக பெற்றோர்களுக்கு அனுமதி மறுத்து தனது அவலத்தை மறைக்கப் பார்ப்பது நிர்வாகத் திறனின்மையின் உச்சம்!

இது பெற்றோர் மற்றும் மக்களிடையே " யாரை காப்பாற்ற, எதை மறைக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு?" என்ற சந்தேகக் கேள்வியை மேலும் வலுக்கச் செய்கிறது’’ எனத் தெரிவித்தார்.

வடு மறைவதற்குள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை:

மேலும், ‘’ கேடுகெட்ட திமுக ஆட்சியில் தாம்பரம் அரசு விடுதியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வடு மறைவதற்குள்ளாகவே, இன்றைய தினம் காஞ்சிபுரத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கே எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தன்னைத்தானே அப்பா என்று சொல்லிக்கொள்ளும் பொம்மை முதல்வரின் காதுகளுக்கு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் மாணவிகளின் அழுகுரல் கேட்கவில்லையா???’’ என அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வப் பக்கம் தெரிவித்து இருக்கிறது.