கிருஷ்ணகிரியில் கீழே கொட்டப்பட மாங்கனிகள்! மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கிருஷ்ணகிரியில் கீழே கொட்டப்பட மாங்கனிகள்! மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!

கிருஷ்ணகிரியில் கீழே கொட்டப்பட மாங்கனிகள்! மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!

Kathiravan V HT Tamil
Published Jun 20, 2025 12:39 PM IST

”இந்த கடுமையான விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மாங்கனிகளை சாலைகளில் கொட்டியும், மாமரங்களை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்”

கிருஷ்ணகிரியில் கீழே கொட்டப்பட மாங்கனிகள்! மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!
கிருஷ்ணகிரியில் கீழே கொட்டப்பட மாங்கனிகள்! மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணாவிரதம்!

அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெறும்  இப்போராட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் குமார் மற்றும் தமிழ் செல்வன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.

மா விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 35,000 ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடியில் ஈடுபட்டு, சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் மாங்கனிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மா உற்பத்தி குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக மாம்பழ சாகுபடி அதிகரித்தது. 

ஆனால், அதிக உற்பத்தி இருந்தபோதிலும், மாங்கனிகளை கொள்முதல் செய்வதில் மாம்பழக் கூழ் ஆலை நிர்வாகங்கள் தயக்கம் காட்டின. மேலும், ஆந்திரா அரசு தமிழக மாங்கனிகளுக்கு தடை விதித்ததும் நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதன் விளைவாக, மாம்பழங்களுக்கான விற்பனை வெகுவாக சரிந்ததுடன், வரலாறு காணாத விலை வீழ்ச்சியும் ஏற்பட்டது. ஒரு கிலோ மாம்பழம் 3 ரூபாய்க்கும், தனியார் பழச்சாறு ஆலைகளால் 5 ரூபாய்க்கும் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த கடுமையான விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மாங்கனிகளை சாலைகளில் கொட்டியும், மாமரங்களை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவின் ஆதரவும் போராட்ட அறிவிப்பும்

மா விவசாயிகளின் இந்த அவல நிலையைக் கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையிலேயே தற்பொழுது இந்த உண்ணாவிரதப் போராட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் மூலம், மா விவசாயிகளின் கோரிக்கைகள் அரசுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரிய தீர்வு கிடைக்கும் என போராட்டக்காரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.