'இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..' வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..' வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

'இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..' வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

Malavica Natarajan HT Tamil
Published Jun 03, 2025 01:37 PM IST

தமிழக செஸ் வீரர் குகேஷ், நார்வே செஸ் போட்டியில் மக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

'இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..' வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி
'இது சாதாரணமல்ல.. இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் குகேஷின் கையில் உள்ளது..' வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

எதிர்காலம் உங்கள் கையில்..

அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவரது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "குகேஷ் என்ன ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்! நேற்று கார்ல்சனை தோற்கடித்தது சிறிய சாதனையல்ல - உண்மையிலேயே ஒரு சாம்பியன். இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் உங்களின் அற்புதமான கைகளில் உள்ளது." எனக் குறிப்பிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

கார்ல்சனுக்கு எதிரான வெற்றி

நார்வே செஸ் 2025 இன் 6வது சுற்றில் ஞாயிற்றுக்கிழமை மக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக டி. குகேஷ் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பெற்றார். தோல்வி நிலையிலிருந்து மீண்டு வந்து உலகின் முதல் இடம் பிடித்த வீரரை 18 வயதான குகேஷ் வீழ்த்தினார். இந்தப் போட்டி 62 மூவ்களில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

உணர்ச்சி மிகுதியில் கார்ல்சன்

தோல்வியின் போது கார்ல்சன் கோபத்தில் மேஜையை அடித்தார். அதன் பிறகு, எழுந்து நின்ற குகேஷுடன் கை குலுக்கினார். குகேஷ் அதிர்ச்சியில் இருந்தார். கார்ல்சன் வெளியே செல்லும் வழியில் அவருடைய முதுகில் தட்டினார்.

டிவி 2 ஸ்போர்ட்டுக்கு பேசிய கார்ல்சன், குகேஷிடம் தோற்றது குறித்துப் பேசினார். மேலும் கிளாசிக்கல் செஸ் இனி அவருக்கு வேடிக்கையாக இல்லை என்று உணர்ந்ததாகக் கூறினார். அவரது வார்த்தைகளில், நார்வே வீரர் முதல் முறையாக தன்னைப் பற்றி சந்தேகிக்கத் தொடங்கியது போல் தெரிந்தது.

குகேஷ் நன்றாக போராடுகிறார்

“இந்தப் போட்டியில் நான் பொதுவாக நன்றாக உணர்கிறேன். ஆனால் இனி விளையாடுவது எனக்கு வேடிக்கையாக இல்லை, அதுதான் பிரச்சனை. எனக்கு இது சுவாரஸ்யமாக இல்லை, நான் மிகவும் நன்றாக விளையாட முடியும் என்பது எனக்குத் தெரியும். நன்றாக விளையாடுவது திருப்திகரமானது, ஆனால் நான் இறுதியில் தோல்வியடைந்தேன், பெரிய பலவீனங்களை வெளிப்படுத்தினேன். குகேஷ் மிகவும் நன்றாகப் போராடுகிறார்,” என்று அவர் கூறினார்.

ஆனந்த கண்ணீரில் குகேஷ்

62 மூவ்களிலும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போட்டியில், கார்ல்சனுக்கு எதிராக குகேஷ் தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற்றார். இதற்கிடையில், வெற்றிக்குப் பிறகு குகேஷ் எப்போதும் போலவே அடக்கமாக இருந்தார். அவர், தனது வெற்றியை உறுதி செய்தவுடன் தன் சந்தோஷத்தை கட்டுப்படுத்த நிதானித்தார். பின், அவர் தனக்கு வந்த ஆனந்தக் கண்ணீரைக் கட்டுப்படுத்தினார்.

100ல் 99 முறை தோற்பவன்

செஸ்24க்கு பேசிய குகேஷ் , “கார்ல்சனுக்கு எதிராக கடினமான மூவ்களை வைத்து விளையாட முயற்சித்தேன், அதிர்ஷ்டவசமாக அவர் நேரக் கட்டுப்பாட்டில் சிக்கினார். இந்தப் போட்டியில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நேரக் கட்டுக்கடங்காமல் போகலாம். நான் 100ல் 99 முறை நான் தோற்றுப் போவேன். இன்று அதிர்ஷ்ட நாள்,” என்று அவர் கூறினார்.