ADMK: ’தவழ்ந்து தவழ்ந்துதான் உயர்ந்த பதவிக்கு வந்தேன்!’ SDPI மாநாட்டில் EPS பேச்சால் பரபரப்பு!
”நான் கிளைச்செயலாளராக இருந்து படிப்படியாக உழைத்து அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக ஆனேன்”

மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
நான் முதலமைச்சர் ஆவேன் என கனவில் கூட நினைக்கவில்லை. உங்களை போல் நானும் அமர்ந்து இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன். அதைக்கூட இன்றைய முதலமைச்சர் கொச்சைப்படுத்தி பேசுகிறார். உழைப்பு என்றால் என்ன என்று தெரியாத முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.
நான் கிளைச்செயலாளராக இருந்து படிப்படியாக உழைத்து அதிமுகவுக்கு பொதுச்செயலாளராக ஆனேன். ஆனால் உங்கள் அப்பா முதலமைச்சராக இருந்ததால் நீ இன்று முதலமைச்சராக ஆகி உள்ளார். நாட்டு மக்களை பற்றி கவலைப்படாமல் வீட்டு மக்களை பற்றி கவலைப்படுபவராக முதலமைச்சராக உள்ளார்.