‘2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..’ அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..’ அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?

‘2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..’ அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Mar 25, 2025 11:03 PM IST

இந்த சந்திப்பில் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பரஸ்பரம் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணிக்கான முக்கிய அம்சங்கள், கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

‘2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..’ அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?
‘2 மணி நேரம்.. குழுவாக.. தனியாக..’ அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் நடந்தது என்ன?

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சிவி சண்முகம் மற்றும் எம்.பி., தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை குழுவாக சந்தித்த அமித்ஷா, அதன் பின் மற்றவர்களை அனுப்பிவிட்டு, எடப்பாடி பழனிசாமியுடன் நீண்ட நேரம் தனிமையில் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில் அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் பரஸ்பரம் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணிக்கான முக்கிய அம்சங்கள், கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் பேசியது என்ன?

  • ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு ஒத்துழைக்குமாறு அமித்ஷா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்
  • ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை ஏற்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருக்கிறாராம்
  • திமுக மீதான ஊழல் விவகாரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமிஷ்தா கூறியிருப்பதாக கூறப்படுகிறது
  • முந்தைய என்டிஏ கூட்டணி உடன் மேலும் சில கட்சிகளை இணைக்க பேசியுள்ளனர்
  • தமிழக பாஜக தலைமை குறித்த விவாதமும் அங்கு நடந்ததாக கூறப்படுகிறது
  • அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என்கிற உத்தரவாதத்தை அமித்ஷா கொடுத்ததாக கூறப்படுகிறது
  • எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக ஏற்கவும், நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது
  • 200 தொகுதிகளுக்கு மேல் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்கிற தன்னுடைய நிலைப்பாட்டை அமித்ஷா வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • இது தவிர, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டதாம்

இருப்பினும் இருதரப்பிலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்த செய்தியாளர்களின் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.