'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்..' - ஈபிஎஸ் பகீர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்..' - ஈபிஎஸ் பகீர் விளக்கம்!

'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்..' - ஈபிஎஸ் பகீர் விளக்கம்!

Karthikeyan S HT Tamil
Published Apr 16, 2025 11:51 AM IST

பாஜகவுடன் கூட்டணி மட்டுமே வைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்..அது எங்கள் இஷ்டம்..' - ஈபிஎஸ் பகீர் விளக்கம்!
'நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்..அது எங்கள் இஷ்டம்..' - ஈபிஎஸ் பகீர் விளக்கம்!

இது எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நாங்கள் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல் வருகிறது. பாஜக - அதிமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.

மீண்டும் அவர் தெளிவுபட டெல்லியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது என்று கூறினார். கூட்டணி என்று தான் சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்களாகவே ஏதாவது பொருள் தேடாதீர்கள். நீங்கள் ஏதேதோ வித்தை காட்டுகிறீர்கள். நீங்களாகவே ஏதாவது வார்த்தைகளைப் பிடுங்கி விறுவிறுப்பான செய்தியைத் தேடுகிறீர்கள். உங்கள் விஞ்ஞான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளதாகவே இவ்வாறு குழப்பம் ஏற்பட்டுள்ளது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கவனம் பெறுகிறது. மேலும் வரும் மே 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டமும் நடைபெறவிருக்கிறது. இந்த சூழலில் கூட்டணி தொடர்பாக ஈபிஎஸ் அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.