இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. இபிஎஸ் முன்வைக்கவிருக்கும் முக்கிய விசயங்கள்!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி விருந்து வைத்தார். பாஜக கூட்டணிக்குப் பின் அதிமுக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வியூகம், கட்டுப்பாடுகள் மற்றும் பொதுவெளியில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்தும் அந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது; பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதன்முறையாக மாவட்டச் செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
சமீபத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அஇஅதிமுக இணைந்தது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி விருந்து வைத்தார். பாஜக கூட்டணிக்குப் பின் அதிமுக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வியூகம், கட்டுப்பாடுகள் மற்றும் பொதுவெளியில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்தும் அந்த கூட்டத்தில் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்களுக்கு காத்திருக்கும் உத்தரவு
அதே போல, இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் பாஜக கூட்டணி முடிவு குறித்தும், அஇஅதிமுகவின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்தும் எட்பபாடி பழனிசாமி விளக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றியும், தொண்டர்களிடம் எடுத்துரைக்க வேண்டிய விசயங்கள் குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம், எடப்பாடி பழனிசாமி எடுத்துரைக்க உள்ளார்.
கட்சியின் நிலைப்பாடு, கட்சியின் கருத்துக்கள் அனைத்தும் தலைமையின் மூலம் மட்டுமே வர வேண்டும், பொதுவெளியில் தேவையற்ற வார்த்தைகளை, கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என்கிற முக்கியமான உத்தரவுகளை மாவட்ட செயலாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டவும், பூத் கமிட்டி போன்ற விசயங்களில் முக்கியத்துவம் தரவும் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்படஉள்ளது. அதே போல, தேர்தலுக்கான பணிகள், மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்னைகள், திமுக அரசின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் குறித்த முழு விபரத்தையும் இபிஎஸ் பெற உள்ளதாகவும் அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
