‘கேரள முதல்வர் சும்மா விடுவாரா? நீங்க மட்டும் ஏன்?’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘கேரள முதல்வர் சும்மா விடுவாரா? நீங்க மட்டும் ஏன்?’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

‘கேரள முதல்வர் சும்மா விடுவாரா? நீங்க மட்டும் ஏன்?’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 19, 2024 10:28 AM IST

‘இதேபோன்று நமது தமிழக கழிவுகளை கேரளா மாநிலத்தில் கொட்டினால் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எப்படி எதிர்வினை ஆற்றி இருப்பார் என்பதை தமிழக முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காப்பது என்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்’

‘கேரள முதல்வர் சும்மா விடுவாரா? நீங்க மட்டும் ஏன்?’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
‘கேரள முதல்வர் சும்மா விடுவாரா? நீங்க மட்டும் ஏன்?’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

பேச்சு வார்த்தை என்ன ஆச்சு?

‘‘கேரளாவும், தமிழ்நாடும் மாமன், மச்சான் உறவாடவும், அண்ணன், தம்பி உறவாகவும், தாய், பிள்ளைகள் உறவாகும் காலங்காலமாக பேணிகாக்கபட்டு வந்தது. தற்போது எல்லை தாண்டிய தொல்லையை இன்னைக்கு தமிழகம் அணுபவிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

நமது முல்லைப் பெரியாறு உரிமை பிரச்சனையில் கூட ,அதில் மராமத்து செய்யும் பணியில் கூட 5நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையை தமிழ்நாடு சந்தித்து வருகிறது, சட்டமன்றத்தில் எடப்பாடியார் முதலமைச்சர் பார்த்து கேள்வி கேட்டார், அதில் கேரளா மாநிலம் வைக்கத்தில் பெரியார் நினைவு நூலகத்தை திறக்க செல்கிறீர்கள், அப்போது கேரளா முதலமைச்சரிடம் முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? என்று கேள்வி கேட்டார், அப்போது மூத்த அமைச்சர் நிச்சயமாக பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினார்.

எடப்பாடியார் அன்றைக்கு முன்வைத்த அந்த கோரிக்கை அவர்கள் எப்படி கையாண்டார்கள், பேச்சுவார்த்தை நடத்தினார்களாக நடத்தவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் மராமத்து பணிக்கு அனுமதி என்ற புதிய நடைமுறையை கேரள அரசு புகுத்தி, அணை பராமரிப்பு தமிழக அரசிடம் தான் உள்ளது என்ற தீர்ப்புக்கு முரணாக கேரளா அரசு செய்ல்படுகிறது.

குப்பைத் தொட்டியா கேரளா

முதலமைச்சர் கேரளா சென்று விட்ட பிறகு, இன்றைக்கு புதிய பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபமாக எழுந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை திருநெல்வேலி அருகே உள்ள நடுக்கல்லூர் மற்றும் கோடகநல்லூர் பகுதி நீர்நிலைகளில் கொட்டப்பட்ட விவகாரம் இன்றைக்கு விவாத பொருளாக உள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர், சுகாதாரத்துறை, மாசுக்கட்டு வாரியம் என அனைத்து தரப்பும் தற்போது சோம்பலை முடித்து களத்திலே இறங்கி இருக்கிறார். கழிவுகளைப் கொட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எச்சரித்து இருக்கிறார்கள்.

இதை நான் எப்படி கையாளுவது, இதை இந்த அரசு இதை எப்படி கையாண்டு இருக்க வேண்டும் இது எப்படி எதிர்கொண்டு இருக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை. சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகவே கேரளத்துடைய கழிவுகளை, கொட்டும் குப்பைத் தொட்டியாக நம் தமிழகத்தில் இருக்கக்கூடிய கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் கொட்டியது, நாம் பல முயற்சிகள் எடுத்த அதை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். ஆனால் மீண்டும் அந்த நிலை தொடர்வது என்பதை இந்த அரசு மவுனமாக வேடிக்கை பார்க்கலாமா? என்பதுதான் இந்த தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி ஆக இருக்கிறது.

நாதியர்த்துப் போனதா தமிழ் சமுதாயம்?

கோவை, ஈரோடு போன்ற பகுதியில் அத்துமீறி கொட்டப்பட்டு வருகிறது அதே போல் கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களிலும் இன்றைக்கு கழிவுநீர் குப்பைகளாக இந்த கழிவுப்பொருள்கள் கூடிய குப்பைமேடாக கேரளா அரசு கையாளுகிற போது இந்த அரசு குறைந்தபட்சம் கண்டனம் தெரிவிக்க வேண்டாமா? கண்டனம் தெரிவிக்கும் போது இடைவெளி ஏற்படும் என்று சொன்னால் குறைந்தபட்சம் கேள்வி கேட்பதற்கு கூட இந்த அரசு தயாராக இல்லை என்பதை பார்க்கிற போது நாதியர்த்துப் போனதா தமிழ் சமுதாயம்? என்று தான் இன்றைக்கு எல்லோரும் ஆழ்ந்த கவலையிலே இன்றைக்கு வேதனையோடு இருக்கிறார்கள்.

ஏற்கனவே திருநெல்வேலி, தென்காசி,கன்னியாகுமரி மாவட்ட குவாரிகளில் இருந்து ஏராளமான லாரிகளிலே கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன, அதேபோன்று உணவு பொருள்களாக அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவு பொருள் வாகனங்களிலே அனுப்பப்பட்டுள்ளன.

இப்படி நாம் அவர்களோடு சகோதரத்துவத்துடன் நம்முடைய கனிம வளங்களை, நம்முடைய உணவுப் பொருட்களை எல்லாம் சகோதரத்துவத்தை பேணுகின்ற வகையிலே நல்லுறவை நாம் பாதுகாக்கின்ற வகையிலே நாம் மேற்கொண்டு வருகிற போது, தமிழகத்தை இப்படி கழிவு பொருட்களால் குப்பை மேடாக ஆக்கலாமா?

இதேபோன்று நமது தமிழக கழிவுகளை கேரளா மாநிலத்தில் கொட்டினால் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எப்படி எதிர்வினை ஆற்றி இருப்பார் என்பதை தமிழக முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு கூட எதிர்வினை ஆற்றாமல் மௌனம் காப்பது என்பது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பூனை போல பதுங்கலாமா?

முல்லைப் பெரியார் பிரச்சினையை உரிமையை குறித்து முதலமைச்சர் மௌனம் காத்தார் தற்போது இதற்கும் மௌனம் காக்கிறார். கேரளா மாநிலத்திற்கு பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் இதெல்லாம் அவர்களுக்கு கொடுப்பதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம், ஆனால் கேரளா அரசு அதற்கு பிரதிபலனாக தொற்றுநோய் பரப்பு வகையில் இதைச் செய்யலாமா?

ஏற்கனவே வடகிழக்கு பருவமழையால் தொற்று நோய் அபாயம் ஏற்படுகிறது, ஆனால் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது இந்த புற்றுநோய் மருந்து கழிவுகளால் மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. வாக்களித்த மக்களுக்கு சோதனை என்றால் புலி போல் பாய்ந்து கேள்வி கேட்க வேண்டிய ஸ்டாலின், இன்றைக்கு பூனை போல பதுங்கி தூங்கிக் கொண்டிருக்கிறார் இது நியாயமா? என்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். சட்டமன்றத்தில் எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கத்தை தருவதற்கு ஸ்டாலின் முன் வருவாரா?,’’ 

என ஆர்.பி.உதயக்குமார் கேள்வி எழுப்பினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.