‘2000.. 5000.. 10000.. இல்ல பூஜ்ஜியமா? இப்போ அரசியலா அவியலா?’ ஆர்.பி.உதயக்குமார் காட்டம்!
‘எடப்பாடி பழனிசாமி அரசு 2500 பொங்கல் பரிசு வழங்கிய போது ,அப்போது 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசியல் செய்த ஸ்டாலின், இன்றைக்கு அவியல் செய்கிறாரா? அரசியல் செய்கிறாரா?’

‘2000.. 5000.. 10000.. இல்ல பூஜ்ஜியமா? இப்போ அரசியலா அவியலா?’ ஆர்.பி.உதயக்குமார் காட்டம்!
அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை எல்லோரும் நோக்கி இருக்கின்ற இந்த வேளையிலே, 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகைக்கு வழங்குவதாக தமிழக அரசுக்கு அறிவித்திருக்கிறது.
இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ஒரு இனிய தொகுப்பாக, மகிழ்வான தொகுப்பாக உருவாக்கியவர் அம்மா, முதன் முதலாக 100 ரூபாய் பொங்கல் பரிசுதொகை வழங்கிய போது,லட்சுமியின் அடையாளமாக எல்லார் இல்லங்களிலும், உள்ளவர்களிலும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.