‘2026ல் அதிமுக கூட்டணி 3வது இடத்திற்கு போகும்’ தவெக பூத் முகவர்கள் மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘2026ல் அதிமுக கூட்டணி 3வது இடத்திற்கு போகும்’ தவெக பூத் முகவர்கள் மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

‘2026ல் அதிமுக கூட்டணி 3வது இடத்திற்கு போகும்’ தவெக பூத் முகவர்கள் மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 27, 2025 07:33 PM IST

‘நாம் 30 சதவீதம் வாக்குகளை பெற்றால், ஆட்சி அமைத்து விடலாம். 2026ல் தவெக முதன்மையான கட்சியாக இருக்கும். அதற்கு அப்புறம் தான் திமுக, அதற்கு அப்புறம் தான் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கும்’

‘2026ல் அதிமுக கூட்டணி 3வது இடத்திற்கு போகும்’ தவெக பூத் முகவர்கள் மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா பேச்சு!
‘2026ல் அதிமுக கூட்டணி 3வது இடத்திற்கு போகும்’ தவெக பூத் முகவர்கள் மாநாட்டில் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

‘‘இங்கு இவ்வளவு இளைஞர்கள் இருக்கிறார்கள். நேற்று டிவி விவாதத்தில், ‘இந்த இளைஞர்களை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்’ என்று பேசிக் கொண்டிருந்தனர். தம்பிகளா… இந்தி எதிர்ப்பு போராட்டத்தை 1965ல் நடத்தியது, 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். ஊழல் ஆட்சியை, அடிமை ஆட்சியை எதிர்ப்பதற்கு இன்று ஒரு புரட்சி இங்கு உருவாகிக் கொண்டிருக்கிறது.

டிவியில் உட்காரந்து புரணி பேசுகிறார்கள்

புரட்சி உடனே தெரியாது, மெதுவாக தான் தெரியும். நேற்று எப்படி ஏர்போர்ட் வந்து இறங்கி, ஓட்டல் வருவதற்குள் ஒரு ரோடு ஷோ இருந்ததோ, இது கட்சிக்காரர்களால் நடந்தது அல்ல. மக்களின் செல்வாக்கால் நடந்தது. பெரிய பெரிய கட்சிகள் பூத் கமிட்டி கூட்டம் நடத்திய கையில் 1500 ரூபாய் கொடுத்து, கையில் ஒரு குவாட்டர் கொடுத்து, லாரி அல்லது பஸ்ஸில் போட்டு அவர்களை அனுப்புவார்கள். அப்படி இல்லை தவெக, தலைவரால், கொள்கையால், குறிக்கோளால், மக்களின் எதிர்கால நம்பிக்கையால் உருவாக்கப்பட்டது இந்த கட்சி. அதனால் தான் ஒரு ரூபாய் செலவில்லாமல், பஸ்ஸில் வந்து இங்கு அமர்ந்திருக்கிறோம் என்றால், 2026 தமிழக வெற்றி கழகத்தின் நாளாகும்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கட்டமைப்பு இருக்கா என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள், இதோ பாருங்கள், இரண்டு நாளாக கோவை முடங்கியிருக்கிறது. சும்மா டிவியில் உட்கார்ந்து கொண்டு, அப்படி நடக்கும், இப்படி நடக்கும் என புரணி பேசிக் கொண்டு, பழைய பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில், 50 வருசமா திமுக, அதிமுகவைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நம்ம வலிமை தெரியாது.

எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம்

ஒரு வரலாறு உருவாகும் போது, பழைய காலத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருப்பார்கள். இன்றைய புதிய சிந்தனை என்பதை மக்கள் தான் உருவாக்குவார்கள். பத்திரிக்கையாளர் என்கிற கட்டமைப்பில், திமுக உருவாக்குபவர்களால் உருவாக்க முடியாது. நேற்றைய விவாதத்தில் ‘தலைவர் விஜய்யின் திட்டம் என்ன? தீவிரமாக பயணிப்பாரா? ஏன் 3 நிமிஷம் பேசுகிறார்?’ என்று பேசுகிறார்கள். 3 நிமிஷம் பேசியதற்கே கோவை முடங்குது. எங்களுக்கு தெரியும் எப்படி, என்ன செய்ய வேண்டும் என்றும், நீங்கள் எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள்.

சிஏஏ சட்டம் வந்த போது, கேரளா அரசு தீர்மானம் நிறைவேற்றி, அதை வைத்து நீதிமன்றம் சென்றார்கள். இங்கு கபடநாடகம் ஆடுபவர்கள், வக்ஃபு திருத்தச் சட்டத்திற்காக தமிழக அரசு ஏன் வழக்கு தொடுக்கவில்லை? தவெக தான் உண்மையான எதிர்கட்சி, எங்கள் தலைவர் தான் உண்மையான எதிர்கட்சி தலைவர். 10 மாதம், நீங்கள் மிகப்பெரிய எதிர்கட்சி தலைவரை எங்கள் தலைவர் மூலம் பார்ப்பீர்கள். நமக்கே அரசியல் கற்றுத் தருகிறார்கள், அதுவும் நம் தலைவரிடம்.

திமுக தோற்று விடும்

ஏன் வரல.. ஏன் வரல.. என்று கேட்டார்கள், இரண்டு நாளா கோவையை பார்த்தீர்களா? இன்னும் தமிழ்நாடு முழுக்க இருக்கு. போலீசாரிடம் நான் கேட்டுக் கொள்கிறேன், எங்கள் தலைவரை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம், மக்கள் பாதுகாப்பை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். தேர்தலில் கள்ள ஓட்டு போட ஆளுங்கட்சி தயாராக இருக்கும், பூத் முகவர்கள் அதை எதிர்ப்பு தெரிவித்து தடுக்க வேண்டும்.

நம் குறிக்கோள், ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு வாக்குச் சாவடி முகவர்களும் 350 வாக்காளர்களை அடைந்துவிட்டோம் என்றால், இப்பொது சொல்கிறார்களே, கூட்டணி என்ன, கூட்டணி இருந்தால் என்ன? இந்த டிவி விவாதத்தில் பாருங்கள், அதிலும் திமுககாரங்களை பாருங்க, தவெக மூன்றாவதுதான்னு சொல்றாங்க. ஏன்தெரியுமா? ஒரு உண்மை தலைவரை எதிர்கொள்ள பயம். திமுக- தவெக என வந்து விடக்கூடாதாம், டிவியில் உட்கார்ந்து பேசுகிறார்கள். அப்படி வந்தால் என்ன ஆகும்? திமுக தோற்றுவிடும், என்பதற்காக அப்படி ஒரு உளவியலை ஏற்படுத்துகிறார்கள்.

அதிமுக கூட்டணி மூன்றாவது இடம்

நாம் 30 சதவீதம் வாக்குகளை பெற்றால், ஆட்சி அமைத்து விடலாம். 2026ல் தவெக முதன்மையான கட்சியாக இருக்கும். அதற்கு அப்புறம் தான் திமுக, அதற்கு அப்புறம் தான் தேசிய ஜனநாயக கூட்டணி(அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி)இருக்கும். 3 முனை போட்டி, அல்லது 4 முனை போட்டி நிலவும் போது ஒரு பூத்துக்கு 350 ஓட்டுகள் நாம் வாங்கினால், நாம் தான் தனிப்பெரும் ஆளுங்கட்சி. அதை மறக்க வேண்டாம். 2 கோடியே 40 லட்சம் ஓட்டுகளை நாம் பெற்றால் போதும். தோழர்களே நமக்கு எதிராக நிறைய பொய் பிரசாரம் பண்ணுவாங்க. எந்த ஊழல் பணத்தாலும் 2026ல் வெற்றி பெற முடியாது.

என் அனுபவத்தில் சொல்கிறேன், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் செலவில்லாமல் வெற்றி பெற்றார்கள். எனவே நம்மாளும் முடியும். மக்கள் சந்திப்பு நடந்தால் போதும், ஜனவரியில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சர்வேயில் 40, 50 சதவீதம் என தலைவர் முதலிடத்தில் இருப்பார்,’’

என்று அந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.