அதிமுக கூட்டணி விவகாரம்: ’ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைபட வேண்டாம்’ தங்கம் தென்னரசுவுக்கு ஈபிஎஸ் பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக கூட்டணி விவகாரம்: ’ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைபட வேண்டாம்’ தங்கம் தென்னரசுவுக்கு ஈபிஎஸ் பதில்!

அதிமுக கூட்டணி விவகாரம்: ’ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைபட வேண்டாம்’ தங்கம் தென்னரசுவுக்கு ஈபிஎஸ் பதில்!

Kathiravan V HT Tamil
Published Mar 21, 2025 04:46 PM IST

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை. திமுக கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக கூட்டணி விவகாரம்: ’ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைபட வேண்டாம்’ தங்கம் தென்னரசுவுக்கு ஈபிஎஸ் பதில்!
அதிமுக கூட்டணி விவகாரம்: ’ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைபட வேண்டாம்’ தங்கம் தென்னரசுவுக்கு ஈபிஎஸ் பதில்!

கூட்டல், கழித்தல் கணக்கை யாரோ போடுகிறார்கள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், எங்களோடு அரசியல் களத்தில் நீண்டகாலமாக களமாடிக் கொண்டு இருப்பவர்களாக நீங்கள் உள்ளீர்கள். தங்களோடு இருக்கும் தொண்டர்களும் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், இயக்கப்பற்றால் அரசியல் களத்தில் களமாடுகிறார்கள்.

அந்த தொண்டர்களோடு பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அண்ணன் தங்கமணி அவர்கள் கூட்டல் கணக்கை இங்கே போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடன் கூட்டல், கழித்தல் கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து உங்களுடைய தொண்டர்கள் எதிர்காலம், உங்கள் அனுதாபிகளின் எதிர்காலத்தை காலத்தில் நீர்த்து போக செய்யும் அளவுக்கு சாணக்கிய தந்திரத்துடன் சிலர் எங்கோ உட்கார்ந்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

வானதி சிரித்தார்! பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டதை போல் உங்கள் மடியில் உள்ள கனத்தை பறித்துக் கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்கள் மீது இருக்க கூடிய உரிமை அன்பின் காரணமாக கேட்டுக் கொள்கிறேன்.

நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார்கள். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதுதான் அர்த்தம் என்பதை நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன் என பேசியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிசாமி பேட்டி 

தங்கம் தென்னரசுவின் பேச்சு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், பட்ஜெட்டில் கணக்குதான் முக்கியம். எனவே பட்ஜெட் கணக்கை சரியாக செயல்படுத்துங்கள். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் கணக்கை எப்படி பார்க்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். 

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை. திமுக கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 

அதிமுகவை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. மற்றவர்கள் எங்களுக்கு எதிரி கிடையாது. 

அதிமுக விழித்துக்கொண்டது. விழித்துக் கொண்டவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். எங்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்ட திமுகதான் எங்கள் கட்சி அலுவலகத்தை பூட்டியது. நீதிமன்றமே அரசாங்கத்திற்கு குட்டு வைத்தது. முதலமைச்சர் அப்போது நடுநிலையுடன் செயல்பட்டு இருக்க வேண்டும். அதிமுகவின் கட்சி அலுவலகத்தை சில ரவுடிகள் சேதப்படுத்தும்போது, பாதுகாப்பு வேண்டும் என புகார் அளித்தோம். அரசே ரவுடிகளுக்கு துணையாக இருந்தது. இப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு நன்மை செய்யப்போகிறவர்களா; இந்த வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கும் அதிமுக மயங்காது. 2026 ஆம் ஆண்டில் திமுக அரசு மக்கள் ஆதரவுடன் அகற்றப்படும் என தெரிவித்து உள்ளார்.