கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெழுத்து இட்ட செந்தில் பாலாஜி!
நேற்று அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினராக இன்று செந்தில் பாலாஜி நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளித்த ஜாமீனுக்கு எதிராக தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கைவிட்டு போன அமைச்சர் பதவி! சாதாரண எம்.எல்.ஏவாக அமலாக்கத்துறை ஆபீசில் கையெடுத்து இட்ட செந்தில் பாலாஜி!
அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனுக்கான கையெழுத்திட்டு சென்றார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கையெழுத்திட வந்தார். 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறை மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.