மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

Priyadarshini R HT Tamil
Published Jun 04, 2025 01:42 PM IST

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் நா.பெலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
மாணவர் சேர்க்கை : டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கை – விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு (பி.எப்.எஸ்சி) தூத்துக்குடி, பொன்னேரி, மற்றும் தலைஞாயிறு கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. நாகையில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் மீன்வளப் பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் என இரண்டு பிரிவுகளில் இளநிலை தொழில்நுட்பக் கல்வி (பி.டெக்) வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகத்தின் சென்னை-வாணியன்சாவடி ஓஎம்ஆா் வளாகத்தில் உள்ள மீன்வள உயிா் தொழில்நுட்ப நிலையத்தில் இளநிலை உயிா் தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிா்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை தொழில்நுட்பவியல் (உணவுதொழில்நுட்பவியல்) வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 3 ஆண்டு இளநிலை தொழில்சார் பட்டப்படிப்புகளான, மீன்பதன தொழில்நுட்பம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்நுட்பம் ஆகிய 3 பிரிவுகளில் முறையே மாதவரம் (சென்னை), முட்டுக்காடு (சென்னை) மற்றும் மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய தொழிற்கல்வி நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கல்வி ஆண்டில் 398 மாணவர்கள் உறுப்பு கல்லூரி மூலமாகவும், 55 மாணவர்கள் தனியார் இணைப்புக் கல்லூரி; மூலமாகவும் தேர்வு செய்யப்பட உள்ளனர். அரசு வழிகாட்டுதலின்படி, ஐசிஏஆா் ஒதுக்கீடு 18 இடங்கள், சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு 4 இடங்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 4 இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு, அரசுப் பள்ளியில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தொழிற்கல்வி மாணவா்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிப்பவர்களுக்கு 7 இடங்களும், மீனவா்களின் குழந்தைகளுக்கு 25 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும், வெளிநாட்டினருக்கு 5 இடங்களும், காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு 2 இடங்களும், சுயநிதி வழி மீன்வளப் பட்டப்படிப்பிற்கு (பி.எப்.எஸ்.சி) 20 இடங்களுக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

மீனவா்களின் குழந்தைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்.சி.) பட்டப்படிப்பிற்கு ஆறு இடங்களும், இளநிலை தொழில்நுட்ப (மீன்வளப் பொறியியல்) பட்டப்படிப்பிற்கு ஒரு இடமும் கூடுதலாக வழங்கப்படுகின்றது.

இப்பிரிவின்கீழ் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணம் அனைத்தும் தமிழ்நாடு மீனவா் நலவாரியம் மூலம் வழங்கப்படுகிறது.

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பல்கலைக்கழக்கத்தின் துணைவேந்தர் முனைவர். நா. பெலிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 2.6.2025ம் தேதி www.admission.tnjfu.ac.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துக்கான கட்டணம் பட்டியிலனத்தவா்களுக்கு ரூ. 300, மற்றவா்களுக்கு ரூ. 600. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 27 தேதி.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. சிறப்புப்பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் அதற்கான தகுதிச் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

விண்ணப்பித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, பொது கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும். சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறும்.கலந்தாய்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

மேலும் தகவல் மற்றும் விபரங்களுக்கு தொலைபேசி(04365-211090), கைப்பேசி (81221 44031) மற்றும் மின்னஞ்சல் admissionug@tnfu.ac.in மூலமாக அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.