Adhav Arjuna: விஜய் உடன் இணைய போவது எப்போது? அடுத்த நகர்வை போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா? தவெகவில் ஐக்கியம் ஆகிறாரா?
எனது பயணம் மூலம் பெரியார், அண்ணா, அம்பேத்கர் வழியில் புதிய மாற்றத்திற்கான பயணத்தை உருவாக்கும் போது நன்மை கிடக்கும்.

’எனது எதிர்கால திட்டம் குறித்து பத்திரிகை நண்பர்களை சந்தித்து விளக்கம் அளிப்பேன்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா தெரிவித்து உள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து கொண்ட ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு திமுக அரசை விமர்சனம் செய்து பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை கட்சி பொறுப்பில் இருந்து விசிக கட்சித் தலைமை சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா நேற்று அறிவித்தார்.
இன்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:- ஆதவ் அர்ஜூனா ஒரு கட்சியின் தலைமையின் கீழ் கட்டுப்பாட்டு செயல்பட வேண்டும் என திருமாவளவன் கூறி உள்ளாரே?
பதில்:- தலைவரின் வார்த்தைகளுக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன், அவரது வார்த்தைகளுக்கும், அன்புக்கும், அவரது ஆலோசனைக்கும் கட்டுப்பட்டு அவரோடு நான் பயணிப்பேன். திருமா அண்ணனின் விமர்சனம் ஒரு அட்வஸ், அவர் எனக்கு என்றும் ஆசான்தான். கொள்கை சார்ந்த அரசியலில் எனது பயணம்.