’முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது!’ கருணாஸ்
“எடப்பாடி, சின்னம்மாவை பயன்படுத்தி முதலமைச்சரானவர், பின்னர் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தார். அவர்களை ஒரு குறிப்பிட்ட ஜாதி வட்டத்திற்குள் அடைக்க முயன்றார்”

’முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய பேரணியால்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது!’ கருணாஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியால்தான் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான கருணாஸ் தெரிவித்து உள்ளார்.
திமுகவின் சாதனைகள்
சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார். “110 பக்க சாதனை புத்தகத்தில், பெண்களுக்கான திட்டங்கள், காலை உணவு திட்டம், 10,000 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இவை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை,” என்று பாராட்டினார். குறிப்பாக, காலை உணவு திட்டத்தை பசியின் அருமையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும் என்று உணர்வுபூர்வமாகக் கூறினார்.