SVe Shekher vs Journalist: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர். அந்த சர்ச்சை கருத்து குறித்த விரிவான தகவல்கள் இதோ!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!
கடந்த மார்ச் 27 ஆம் தேதி நாரதகான சபாவில் நடைபெற்ற நாடகத்தில் பிரபல நகைச்சுவை நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக அவர் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
நாடகத்தில் இடம் பெற்ற காட்சியில், எஸ்.வி.சேகர் அரசியல்வாதி தோற்றத்தில் நடிக்கிறார். அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஒரு பெண் பத்திரிகையாளர் வருகிறார். அந்த பெண் பத்திரிகையாளரை உட்காருங்க என்று அவர் சொல்கிறார். ஆனால், அங்கு நாற்காலிகள் எதுவும் இல்லை. அந்த பெண் பத்திரிகையாளர் நாற்காலி எதுவும் இல்லையே நான் எப்படி உட்காருவது என்று கேட்கிறார்.