தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  A 12th Class Girl Was Killed In A Collision With A Government Bus Near Crompet

சுதந்திர தினவிழாவுக்கு பள்ளி சென்ற மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்!

Divya Sekar HT Tamil
Aug 15, 2022 12:23 PM IST

குரோம்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதி 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு
அரசு பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் தமிழகம் முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளிகளிலும் மூவர்ண கொடி ஏற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குரோம்பேட்டை அருகே 12 ஆம் வகுப்பு மாணவி சுதந்திர தின விழாவை கொண்டாட பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் விழா முடிந்தது வீடு திரும்பிய போது அரசுப் பேருந்து மோதியது. இதில் மாணவி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் மாணவி சைக்கிளில் சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.சுதந்திர தின விழாவில் பங்கேற்று வீடு திரும்பிய போது மாணவி விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்