Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!
”Savukku Shankar: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2நாட்கள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”

’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்
தேனி மாவட்டத்தில் இரண்டரை கிலோ கஞ்சா வைத்து இருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் மகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல்துறையால் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேனி மாவட்ட காவல்துறை தரப்பில் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த போலீஸ் காவலில் எடுக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.