மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்சி முறையில் அகற்றம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்சி முறையில் அகற்றம்!

மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்சி முறையில் அகற்றம்!

Suguna Devi P HT Tamil
Published May 13, 2025 09:39 AM IST

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா நேற்று (12/05/2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டும் அல்லாது பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று மட்டும் மதுரையில் இருந்து 210 டன் அளவுள்ள குப்பை அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்சி முறையில் அகற்றம்!
மதுரை சித்திரை திருவிழாவில் குவிந்த குப்பைகள்! எத்தனை டன் தெரியுமா? சுழற்சி முறையில் அகற்றம்! (travel2tamilnadu)

கூட்ட நெரிசலில் உயிரிழப்பு

கோலாகலமாக நடந்து முடிந்த சித்திரை திருவிழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் குப்பைகள் குவிந்ததாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தால் இருவர் உயிரிழந்தனர். இந்த கூட்டத்தில் நின்று அழகரை தரிசித்த திருநெல்வேலியை சேர்ந்த பூமிநாதன் (65) என்ற பொறியாளர் மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை கொண்டு செல்லவும் இந்த கூட்டம் பெரும் சவாலாக இருந்தது. இதன் காரணமாக அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இதே போல கண்ணன் (43 ) என்பவரும் கூட்ட நெரிசலால் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்த உயிரிழப்புகளை தாண்டி குவிந்த பக்தர்கள் போட்ட குப்பையை அகற்றவே மாநாகராட்சி நிர்வாகம் பெரும் பாடு பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வினை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதலாக கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதிகளுக்குள் அனுமதிச்சீட்டு வைத்திருந்த முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

கட்டுக்கடங்காத கூடிய பக்தர்கள் கூட்டத்தில் மதுரை சித்திரை திருவிழாவில் நேற்று(12/05/2025) கூடிய மக்கள் கூட்டம் போட்ட குப்பை மட்டும் 210 டன் எடை இருந்துள்ளது. இதனை அகற்ற மதுரை மாநகராட்சி சார்பில் 30 லாரிகள் மற்றும் 30 டிராக்டர்கள் சுழற்சி முறையில் 103 வாகனங்களில் இந்த குப்பைகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இதற்கு சரியான முன்னேற்பாடுகள் இல்லாதது காரணமாக இருந்த போதிலும், பொறுப்பின்றி குப்பையை போடும் பழக்கம் இன்னும் தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. இதுவே இந்த பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது.