10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

Kathiravan V HT Tamil
Published May 16, 2025 04:46 PM IST

”தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே”

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ’வெற்றிக்கு வாழ்த்து! தோல்விக்கு ஊக்கம்!’ ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 4,35,119 மாணவியரும், 4,36,120 மாணவர்களும் அடங்குவர். இதில் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். இது கடந்த ஆண்டு (மார்ச் / ஏப்ரல் 2024) தேர்ச்சி விகிதமான 91.55% உடன் ஒப்பிடும்போது 2.25% அதிகமாகும். பாலின வாரியான தேர்ச்சி விகிதத்தில், மாணவர்களை விட மாணவியரே சிறந்து விளங்குகின்றனர். இந்த ஆண்டு மாணவியரின் தேர்ச்சி விகிதம் 95.88% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.74% ஆகவும் உள்ளது. மாணவர்களை விட மாணவியர் 4.14% அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தேர்வில் மொத்தம் 15,652 மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து 

இது தொடர்பாக தனது எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்கால கல்வி பயணத்திலும் வெற்றி என்ற இலக்கை பெற இதே உழைப்பை தொடருங்கள். தேர்ச்சியின் எல்லை வரை சென்று வெற்றியை தவற விட்டவர்கள் யாரும் மனம் தளர வேண்டாம். வெற்றி தோல்வி என்பது வாழ்வில் தற்காலிக நிகழ்வே. உங்களின் முயற்சிகளை மறுபரீசலனை செய்து வெற்றிக்கான வழிகளைத் தேடி முன்னேறுங்கள். கற்றலின் மீதான உங்கள் ஆர்வமும், கடின உழைப்பும் உங்கள் வெற்றியை உறுதியாக்கும். உங்களுக்கு என் வாழ்த்துகள்.