தைபே ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேறினார்
20 வயதான ஆயுஷ் ஷெட்டி இந்த ஆண்டில் தனது சீனியர் சக வீரருக்கு எதிராக பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

தைபே ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேறினார்
தைபே ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வியாழக்கிழமை தனது சக நாட்டவரான கிடாம்பி ஸ்ரீகாந்தை தோற்கடித்து ஆண்கள் ஒற்றையர் காலிறுதிக்கு முன்னேறினார்
பேட்மிண்டன் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள ஆயுஷ் ஷெட்டி 21-16, 15-21, 21-17 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 82-வது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்தை வீழ்த்தினார்.
ஆயுஷ் ஷெட்டி
20 வயதான ஆயுஷ் ஷெட்டி இந்த ஆண்டில் தனது சீனியர் சக வீரருக்கு எதிராக பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் முன்னாள் உலக நம்பர் 1 மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற ஸ்ரீகாந்தை ஷெட்டி தோற்கடித்தார்.