Vinesh Phogat: ’வினேஷ் போகத்திற்கு ஒலிம்பிக் வெள்ளி பதக்கம் தர முடியாது!’ விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் திட்டவட்டம்!
ஒலிம்பிக் தகுதி நீக்கத்தை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் தரக் கோரி தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருந்ததற்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் PT உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த அமைப்ப (UWW) மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு (IOC) எதிரான மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தின் மேலுமுறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். இந்த நிராகரிப்பு வினேஷ் போகத்திற்கும். குறிப்பாக விளையாட்டு சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.