Paris Olympics 2024: விமான ரன்வேயில் பயிற்சி! ஒரேயொரு வீரரை மட்டும் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு போட்டியாளராக அனுப்பும் நாடு
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஒரேயொரு வீரரை மட்டும் போட்டியாளராக அனுப்பும் விமான ரன்வேயில் பயிற்சி பகுதியை சேர்ந்த நாடாக துவாலு உள்ளது. ஓட்டப்ப பயிற்சி வீரரான இந்த நாட்டை சேர்ந்த போட்டியாளர் விமான ரன்வேயில் வைத்து பயிற்சியை மேற்கொண்டுள்ளாராம்.

உலகமே எதிர்பார்த்த காத்திருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற இருக்கிறது. ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளன. இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 30க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.
தென் பசிபிக் தீவு நாட்டை சேர்ந்த வீரர்
இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தென் பசிபிக் தீவு நாடாக இருந்து வரும் துவாலு நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் ஸ்பிரிண்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் துவாலு சார்பில் கராலோ மைபுகா என்பவர் பங்கேற்கவுள்ளார்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கொடி ஏந்தும் கெளரவத்தை பெற்ற 25 வயதாகும் இவர், இந்த முறை மீண்டும் தனது நாட்டின் சார்பில் களமிறங்குகிறார்.
