Commonwealth games: தந்தை இறந்தது தெரியாமல் பாக்ஸிங்கில் தங்கம் வென்ற வீராங்கனை
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Commonwealth Games: தந்தை இறந்தது தெரியாமல் பாக்ஸிங்கில் தங்கம் வென்ற வீராங்கனை

Commonwealth games: தந்தை இறந்தது தெரியாமல் பாக்ஸிங்கில் தங்கம் வென்ற வீராங்கனை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Dec 02, 2022 12:54 PM IST

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முந்தைய நாள் அவரது தந்தை இறந்துபோன நிலையில் அதுபற்றிய தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை.

நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை லேகப்பிரியா
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை லேகப்பிரியா

இதையடுத்து நேற்று நடைபெற்று போட்டியில் ஜூனியர் பெண்கள் 52 கிலோ எடைப்பிரிவில் 350 கிலோ வரை பளு தூக்கி தங்க பதக்கம் வென்றார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவித்த லோக பிரியாவுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருந்தது.

லோக பிரியாவின் தந்தை செல்வமுத்து கடந்த புதன்கிழமையன்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அன்றைய நாள் இரவே அவரது சொந்த ஊரான கல்லூக்காரன்பட்டியில் இறுதி சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்த தகவல் லோக பிரியாவுக்கு தெரிந்தவுடன் கதறி அழுதார். இந்தியாவுக்காக தங்கம் வென்று, பின்னர் தனது தந்தையை பார்க்கலாம் என்ற அவரது ஆசை நிறைவேறாமல் போனதால் துடிதுடித்து அழுதுள்ளார்.

லோக பிரியாவுக்கு மூன்று சகோதரிகள் உள்ளார்கள். தந்தை இறந்தது பற்றி தெரியாமல் நாட்டுக்காக விளையாடி தங்கம் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார் லோக பிரியா.