67வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் - ஜூனியர், இளைஞர் பிரிவு தங்கப்பதக்கத்தை சுருட்டிய சுருச்சி போகட்
கடைசியாக 2018 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் 13 வயதான ஈஷா சிங் மூன்று பிரிவுகளில் களமிறங்கி மூன்று தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினார்.

டெல்லி அருகே துக்ளகாபாத் டாக்டர் கர்னி சிங் ரேஞ்சில் நடந்த 67வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஏர் பிஸ்டலில் பெண்கள் பிரிவில் 585 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார் சுருச்சி போகட். இதன் மூலம் ஜூனியர் மற்றும் இளைஞர்களுக்கான தங்கப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சியாளர் சுரேஷ் சிங்கிடம் பயிற்சி பெற்று சுருச்சி போகட் நிகழ்த்தியிருக்கும் நம்பமுடியாத சாதனையாக அமைந்துள்ளது. சுருச்சி போகட் ஹரியானா மாநிலம், பிரோஹரில் உள்ள அரசு கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியாக திகழ்ந்து வருகிறார்.
கடைசியாக 2018ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் 13 வயதான ஈஷா சிங் மூன்று பிரிவுகளில் களமிறங்கி மூன்று தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினார். அதன் பின்னர் தற்போது சுருச்சி போகட் இதை செய்துள்ளார்.