India Open: பி.வி. சிந்து ஒரு மணி நேரம் போராட்டம் வீண்.. பதக்க நம்பிக்கையை தக்க வைத்த சாத்விக் - சிராக் ஜோடி
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பரபரப்பான போட்டியில் கொரிய ஜோடி ஜின் யோங் மற்றும் காங் மின் ஹியூக் ஆகியோருக்கு எதிராக போராடி வியர்வை சிந்திய இந்திய ஜோடி சாத்விக் மற்றும் சிராஜ் ஷெட்டி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் உள்ள கேடி ஜாதவ் இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ் ஆகியோர் தோல்வியை தழுவி காலிறுதி போட்டியுடன் நாக் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் இரட்டையர் பிரிவில் சாத்விக் - சிராக் ஜோடி இந்தியாவின் பதக்க கனவை தக்கவைத்துள்ளது.
போராடி வெற்றி
ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நடசத்திர ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, கொரிய ஜோடியான ஜின் யோங் மற்றும் காங் மின் ஹியூக் ஆகியோருக்கு எதிராக மோதியது. பரபரப்பான இந்த போட்டியில் முழு திறமையும் வெளிப்படுத்திய இந்திய ஜோடி, வியர்வை சிந்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 47 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-10, 21-17 என்ற புள்ளி கணக்கில் அரையிறுதிக்கு முன்னேறியது.
"தொடக்கத்திலிருந்தே, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதைத்தான் நாங்கள் செய்ய விரும்பினோம். நாங்கள் மட்டும் கொஞ்சம் வேகத்தை குறைத்திருந்தால் அவர்கள் அதை நன்கு பயன்படுத்தி இருப்பார்கள்.