Swiss Open 2025: முதல் சுற்றிலேயே பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி.. ஆண்கள் பிரிவில் இருவர் முன்னிலை! கலவை பிரிவில் வெற்றி
Swiss Open 2025: இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு இந்தியர்கள், கலவை இரட்டை பிரிவில் இந்திய ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நட்ச்சத்திர வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து தோல்வியை தழுவி வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பிரியான்ஷு ராஜாவத், சங்கர் சுப்பிரமணியன் ஆகியோர் அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பி.வி. சிந்து தோல்வி
சுவிஸ் ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் பி.வி. சிந்து, மாளிவிகா பன்சோத், இஷாராணி பருவா, ஆகர்ஷி காஷ்யப், அன்மோல் கர்ப், அனுபமா உபாத்யாயா, ரக்ஷிதா ராமராஜ் ஆகியோர் களமிறங்கினார். இதில் அடுத்த சுற்றுக்கு அனுபமா உபாத்யாயா, இஷாராணி பருவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து தனது முதல் போட்டியில் டென்மார்க்கின் ஜூலி ஜேக்கப்சனை எதிர்கொண்டார். பரபரப்பான இந்த போட்டியில் 17-21, 19-21 என்ற புள்ளிக்கணக்கில் நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்து வெளியேறினார். இந்த ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முதல் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளார்.
அடுத்த சுற்றில் சங்கர் சுப்பிரமணியன், ராஜாவத்
உலக அளவில் 35வது ரேங்கிங்கில் இருந்து வரும் பிரியான்ஷு ராஜாவத், சுவிட்சர்லாந்தின் டோபியாஸ் குயென்சிக்கு எதிரான போட்டியில் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 29 நிமிடங்கள் இந்த போட்டி நீடித்தது.
ராஜாவத் தனது அடுத்த போட்டியில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் என்பவரை எதிர்கொள்கிறது.
சங்கர் சுப்பிரமணியன், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசன் 21-5, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த போட்டியில் மற்றொரு டென்மார் வீரர் ஆண்டர்ஸ் அன்டன்சன் என்பவரை எதிர்கொள்கிறார்.
மேலும் படிக்க: காமன்வெல்த் போட்டிகளில் பேட்மிண்டன் நீக்கம் மோசமான முடிவு
முன்னதாக பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அனுபமா உபாத்யாயா மற்றொரு இந்திய வீராங்கனை அனுமோல் கரப் என்பவரை 21-14, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு பிறகு இந்தோனேஷியா நாட்டின் நான்காம் சீட் வீராங்கனையான புத்ரி குசுமா வர்தானி என்பவரை தனது அடுத்த போட்டியில் எதிர்கொள்கிறார்.
கலவை இரட்டையர் பிரிவு
கலவை இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சதீஷ் குமார் கருணாகரன் மற்றும் ஆத்யா வாரியத் ஜோடி 21-15, 22-20 என்ற செட் கணக்கில் அல்ஜீரியாவின் தானினா மற்றும் கொசீலா மம்மேரியை வீழ்த்தியது. இந்த ஜோடி தனது அடுத்த போட்டியில் சீன தைபேவை சேர்ந்த குவாங் ஹெங் லியு மற்றும் யு சியே ஜெங் ஆகியோரை எதிர்கொள்கிறது.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் மார்ச் 18 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2025 பிடபிள்யூஎஃப் உலக டூரில் ஒன்பவதாவது தொடராக இது அமைந்துள்ளது. 1955 முதல் சுவிஸ் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்திலுள்ள பேசல் நகரில் இந்த போட்டிகளை நடைபெறுகின்றன.
இந்த தொடரில் இதுவரை இந்தியா ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3, ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஒன்று என மொத்தம் 7 முறை பதக்கம் வென்றுள்ளது.

டாபிக்ஸ்