poovamma failed dope test:ஊக்கமருந்து பரிசோதனை தோல்வி! பூவம்மாவுக்கு 2 ஆண்டு தடை
இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 3 மாத தடை, தற்போது 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டடுள்ளது.
கடந்த ஆண்டு தேசிய அளவிலான தடகள தொடரான இந்தியா கிராண்ட் ப்ரீ 1 தடகள போட்டியில் பங்கேற்றார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பூவம்மா ராஜு. இந்த போட்டிகளின்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான நாடா (NADA), பூவம்மாவிடமிருந்து மாதிரிகை சேகரித்தன.
ட்ரெண்டிங் செய்திகள்
இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வாடா (WADA) தடை செய்திருந்த ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனால் கடந்த ஜூன் மாதம் ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கை குழு பூவம்மாவுக்கு 3 மாதம் தடை விதித்தது. இதற்கு எதிராக நாடா மேல் முறையீடு செய்தததை தொடர்ந்து பூவம்மாவுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது பூவம்மா ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளதால், இந்திய கிராண்ட் ப்ரீ 1 மற்றும் 2 ஆகியவற்றில் வென்ற வெள்ளி பதக்கங்கள் பறிமுல் செய்யப்படும்.