தமிழ் செய்திகள்  /  Sports  /  Quarter Miler Poovamma's Ban Increased From 3 Months To Two Years

poovamma failed dope test:ஊக்கமருந்து பரிசோதனை தோல்வி! பூவம்மாவுக்கு 2 ஆண்டு தடை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 21, 2022 03:07 PM IST

இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 3 மாத தடை, தற்போது 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டடுள்ளது.

இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வாடா (WADA) தடை செய்திருந்த ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் கடந்த ஜூன் மாதம் ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கை குழு பூவம்மாவுக்கு 3 மாதம் தடை விதித்தது. இதற்கு எதிராக நாடா மேல் முறையீடு செய்தததை தொடர்ந்து பூவம்மாவுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது பூவம்மா ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளதால், இந்திய கிராண்ட் ப்ரீ 1 மற்றும் 2 ஆகியவற்றில் வென்ற வெள்ளி பதக்கங்கள் பறிமுல் செய்யப்படும்.

WhatsApp channel