HBD Mariyappan Thangavelu: இந்தியாவுக்காக பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற தமிழக மண்ணின் மைந்தன்
இந்தியாவுக்காக பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற தமிழக மண்ணின் மைந்தன் ஆக இருந்து வரும் மாரியப்பன் தங்கவேலுவின் பிறந்தநாள் இன்று.

இந்தியாவுக்காக பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற தமிழக மண்ணின் மைந்தன்
மாரியப்பன் தங்கவேலு என்கிற இந்த பெயரை உலக தமிழர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. 2016இல் ரியோவில் நடைபெற்ற கோடை கால பாரிலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தார்.
2004ஆம் ஆண்டுக்கு பின்னர் பாரிலிம்பிக் விளையாட்டில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றார் மாரியப்பன் தங்கவேலு.
தமிழக மண்ணின் மைந்தன்
சேலம் மாவட்டம் பெரிய வடக்கம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேலு. மொத்தம் நான்கு அண்ணன்கள், ஒரு தங்கை என மாரியப்பன் உடன் பிறந்தவர்களாக இருந்து வரும் நிலையில், அவரது தந்தை சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.