Leicester city vs Tottenham: பரபரப்பாக நடந்த கால்பந்து மேட்ச்.. இறுதி நிமிட கோலால் டிரா!
Premier league: டார்கெட்டை நோக்கி பந்தை கொண்டு செல்வதிலும் சாமர்த்தியமாக டோட்டன்ஹாம் அணி செயல்பட்டது. இரு அணி வீரர்களும் சிவப்பு அட்டை எச்சரிக்கையைப் பெறவில்லை எனும் போதிலும், மஞ்சள் அட்டை எச்சரிக்கையை தலா 1 முறை இரு அணி வீரரும் பெற்றனர்.
Leicester city vs Tottenham: பரபரப்பாக நடந்த கால்பந்து மேட்ச்.. இறுதி நிமிட கோலால் டிரா! REUTERS/Hannah Mckay (REUTERS)
Football match: ப்ரமீயர் லீக் கால்பந்து போட்டியில், லெய்செஸ்டர் சிட்டி எஃப்.சி., டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் எஃப்.சி. அணிகள் மோதின. இந்த மேட்ச் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது.
இங்கிலாந்தின் கிங் பவர் ஸ்டேடியத்தில் இந்த மேட்ச் இன்று நடந்தது.
பரபரப்பாக நடந்த மேட்ச்
பரபரப்பாக நடந்த இந்தக் கால்பந்து போட்டியில், டோட்டன்ஹாம் அணி முதல் பாதியில் 29வது நிமிடத்தில் ஒரு கோல் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, இரு அணிகளும் இன்னொரு கோலை பதிவு செய்ய முடியவில்லை. டோட்டன்ஹாம் அணி பந்தை தங்கம் வசம் அதிகம் வைத்திருந்தது.