Virat kohli on Dhoni:தோனியால் நான் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்ந்ததில்லை - கோலி
என்னால் தோனிக்கும், அவரால் எனக்கும் எந்த தருணத்திலும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவானதில்லை. டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னர் அவர் மட்டும்தான் என்னை தொடர்பு கொண்ட என்று விராட் கோலி செய்தியாளர்களிடம் உருக்கமாக பேசினார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. ஆனால் இந்தப் போட்டியில் சிறப்பாக பேட் செய்த கோலி 60 ரன்கள் விளாசினார். இருப்பினும் கடைசி கட்டத்தில் பெளலிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் இந்தியா தோல்வியுற்றது.
180 ரன்கள் அடித்து அதை கட்டுப்படுத்த முடியாத இந்திய அணியின் பெளலிங், பீல்டிங் மீது விமர்சனங்கள் முன்வைகப்பட்ட போதிலும், அடுத்தடுத்து இரண்டு அரைசதம் என டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் அவர் பார்முக்கு திரும்பியிருப்பது நிம்மதி அளித்திருப்பதாகவும் பலரும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கோலி பல்வேறு விஷயங்களை உருக்கமாக பேசினார். அப்போது தோனிக்கும் தனக்குமான உறவு குறித்து அவர் கூறும்போது,