Chennai Open Chess: 15வது சென்னை ஓபன் செஸ்.. பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் இனியன்.. டாப் 9 இடத்தில் இந்தியர்கள்
Chennai Open Chess: 15வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டரான இனியன் பட்டம் வென்றுள்ளார். முதல் 10 இடத்தில் 9 பேர் இந்தியர்களாக உள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான இனியன் பட்டம் வென்றுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தையும் இந்திய வீரர்களே வென்றுள்ளனர்.
இனியன் சாம்பியன் பட்டம்
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரில் 7 வெற்றி 3 டிரா செய்துள்ளார் இனியன். 8.5 புள்ளிகளை பெற்ற அவர் சாம்பியன் ஆனார். இவருக்கு அடுத்தபடியாக எம்.ஆர். வெங்கடேஷ் இரண்டாவது இடத்தையும், ஐ.எம். அரோன்யா கோஷ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சாம்பியன் பட்டம் வென்ற கிராண்ட் மாஸ்டர் இனியனுக்கு சக்தி குரூப் டாக்டர் என். மகாலிங்கம் கோப்பை வழங்கப்பட்டது. பட்டம் வென்ற இனியன் இரண்டு கிராண்ட் மாஸ்டர்கள், இரண்டு சர்வதேச மாஸ்டர்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஒரு கிராண்ட் மாஸ்டர், 2 சர்வதேச மாஸ்டர்களுக்கு எதிரான போட்டியை ட்ரா செய்துள்ளார்.