இந்தோனேஷியா ஓபன் 2025: காலிறுதிக்கு நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! வெளியேறிய பி.வி. சிந்து
டென்மார்க் ஜோடியை வீழ்த்திய இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து ஆகியோர் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வெளியேறினர்.

இந்தோனேஷியா ஓபன் 2025: காலிறுதிக்கு நுழைந்த சாத்விக் - சிராக் ஜோடி! வெளியேறிய பி.வி. சிந்து
இந்தோனேஷியா ஓபன் 2025 பேட்மிண்டன் தொடர் ஜகர்தா நகரில் நடைபெற்று வருகிறது. ஜூன் 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி ஜூன் 8 வரை நடைபெறுகிறது. இதில் இந்திய நட்சத்திர ஜோடியான சாத்விக் - சிராக் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
காலிறுதியில் சாத்விக் - சிராக் ஜோடி
BWF சூப்பர் 1000 போட்டியில் அங்கமாக இருக்கும் இந்த தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில்
சாத்விக் - சிராக் ஜோடி டென்மார்க்கின் ராஸ்மஸ் கஜேர் மற்றும் ஃபிரடெரிக் சோகார்ட் ஜோடியை 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. ஒரு மணி நேரம் எட்டு நிமிடங்கள் இந்த போட்டி நீடித்த நிலையில் இந்தியா ஜோடி தொடக்க செட்டில் தோல்வி அடைந்த போதிலும், அடுத்த இரண்டு செட்களில் கம்பேக் கொடுத்தது.