Ind vs Aus: ODI மாறியே இல்லையே.. டி20 போல் அதிரடியாக விளையாடிய ஆஸி., வெற்றி!
India vs Australia 2nd ODI: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் தொடரில் ஆஸி., வென்றது. இதையடுத்து 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடந்தது. மழை வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண பகவானின் அருளால் மழை எதுவும் பெய்யாமல் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆனால், 26 ஓவர்களில் முடிவுக்கு வந்தது இந்திய அணியின் இன்னிங்ஸ். இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, ஆஸி., அணி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் வெற்றி கண்டது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், மிட்செல் மார்ஷ் 66 ரன்களும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் தொடரில் ஆஸி., வென்றது. இதையடுத்து 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2வது ஆட்டத்தில் ஆஸி., வென்றது.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பீல்டிங்கை ஆஸி., தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்து விளையாடியது இந்தியா.
ஆஸி.,யின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் தவித்தனர்.
தனிப்பட்ட காரணத்துக்காக முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடாமல் இருந்த ரோகித் சர்மா, இந்த ஆட்டத்தில் அணியை வழிநடத்த வந்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய அவர், 15 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்சாகி ஆட்டமிழந்தார்.
ரோகித் ஆட்டமிழப்பதற்கு முன்பே முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் சுப்மன் கில். அவரும் ஸ்டார்க் பந்துவீச்சிலேயே வெளியேறினார்.
அடுத்த களம் புகுந்த விராட் கோலி மட்டும் நிதானமாக விளையாடி வருகிறார். ரோகித் ஆட்டமிழந்ததை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வாண வேடிக்கை காண்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் ஒரு நாள் கிரிக்கெட்டைப் போலவே மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ரன்களின்றி நடையைக் கட்டினார் சூர்யகுமார் யாதவ்.
முதல் ஆட்டத்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கே.எல்.ராகுல், இந்த ஆட்டத்தில் 9 ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் வந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அப்போட் வீசிய பந்தை அடிக்க முயன்றபோது ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்மித்திடம் கேட்ச் ஆனது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் முதல் 12 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார் மிட்செல் ஸ்டார்க்.
31 ரன்களில் ஆட்டமிழந்தார் விராட் கோலி. ஜடேஜாவும் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து அக்ஸர் படேல் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
மறுபக்கம் முகமது ஷமி, குல்தீவ் யாதவ் ஆகியோரும் வந்தவேகத்தில் ஆட்டமிழந்தனர்.
ஆஸி., தரப்பில் சான் அப்போட் 3 விக்கெட்டுகளை அள்ளினார். நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
26 ஓவர்களில் முடிவுக்கு வந்தது இந்திய அணியின் இன்னிங்ஸ். இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. 118 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸி., விளையாடியது.