Sumeeth Reddy: காமன்வெல்த் பதக்கம் வெற்றியாளர்.. பேட்மிண்ட்ன் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பி சுமீத் ரெட்டி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Sumeeth Reddy: காமன்வெல்த் பதக்கம் வெற்றியாளர்.. பேட்மிண்ட்ன் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பி சுமீத் ரெட்டி

Sumeeth Reddy: காமன்வெல்த் பதக்கம் வெற்றியாளர்.. பேட்மிண்ட்ன் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பி சுமீத் ரெட்டி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 25, 2025 05:58 PM IST

மனு அட்ரியுடன் ஆண்கள் இரட்டையர் ஜோடியை உருவாக்கிய ஹைதராபாத் வீரரான சுமீத் ரெட்டி, அவரது மனைவி என் சிக்கி ரெட்டி உட்பட பல ஷட்லர்களுடன் கலப்பு இரட்டையர் போட்டிகளிலும் விளையாடினார்.

காமன்வெல்த் பதக்கம் வெற்றியாளர்.. பேட்மிண்ட்ன் போட்டிகளில் இருந்து ஓய்வை  அறிவத்த பி சுமீத் ரெட்டி
காமன்வெல்த் பதக்கம் வெற்றியாளர்.. பேட்மிண்ட்ன் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவத்த பி சுமீத் ரெட்டி

இதையடுத்து 33 வயதாகும் சுமீத் ரெட்டி, ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், பேட்மிண்டன் பயிற்சியாளராக முழு கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த சுமீத் ரெட்டி, மனு அட்ரி உடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் பிரிவு ஜோடியாக இந்தியாவுக்காக பல போட்டிகளில் களமிறங்கியுள்ளார். அதேபோல் கலவை இரட்டையர் பிரிவு போட்டியில் பல்வேறு வீரர், வீராங்கனைகளுடன் விளையாடியுள்ளார். இவரது மனைவியும், பேட்மிண்டன் வீராங்கனையுமான சிக்கி ரெட்டியுடன் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சுமீத் ரெட்டி சாதனைகள்

இந்திய இரட்டையர்கள் வெற்றிகரமான இரட்டைர்களாக வலம் வந்த சுமீத் மற்றும் மனு அட்ரி ஜோடி உலக அளவில் 17வது ரேங்கிங்கை பெற்றுள்ளனர். 2016ஆம் ஆண்டில் தெற்கு ஆசியா விளையாட்டில் தங்க பதக்கம் வென்றுள்ளனர். அதேபோல் ரியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற இந்த ஜோடி, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிய ஆண்கள் சாம்பியன்ஷிப்பில் விளையாடியுள்ளனர்.

சுமீத் ரெட்டி 2014 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் விளையாடினார். 2015ஆம் ஆண்டு மெக்சிகோ கிராண்ட் பிரிக்ஸ், 2016 கனடா ஓபன் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர், யுஎஸ் ஓபன், டச்சு ஓபன் 2015 ஆகிய போட்டிகளில் ரன்னர் அப் பட்டத்தை வென்றுள்ளார்.

2017 சையத் மோடி இண்டர்நேஷனல் போட்டியில் அஸ்வின் பொன்னப்பாவுடன் இணைந்து விளையாடிய சுமீத் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

தொழில்முறை பேட்மிண்டனில் இருந்து விலகுகிறேன்

"நான் எப்போதும் என் வரம்புகளைத் தாண்டிச் சென்றிருக்கிறேன். என் வாழ்க்கையில் என்னால் சாதிக்க முடியாத விஷயங்களைச் சாதிக்க விரும்பினேன். ஆனால் தற்போது, ​​உலகத் தரவரிசையில் 25வது இடத்தில் இருந்தாலும், என் வாழ்க்கையின் சிறந்த கட்டம் தற்போது எனக்கு பின்னால் இருப்பதாக நம்புகிறேன். மேலும், வேறு சில சூழ்நிலைகள் இருந்தபோதிலும், நான் எனது தொழில்முறை விளையாட்டு வாழ்க்கையிலிருந்து விலகியுள்ளேன்.

நம்புங்கள், உங்கள் வாழ்க்கையில் ஒரு காலம் வரும், அப்போது நீங்கள் தொழில்முறை விளையாட்டை நிறுத்த வேண்டியிருக்கும், அந்த நாளில் நீங்கள் எந்த வருத்தமும் இல்லாமல் ஒதுங்கிச் செல்ல முடியும். அப்போது 110% வரை சிறந்த பதிப்பை நீங்கள் கொடுத்துள்ளீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இறுதியாக எனது விளையாட்டு வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொரு நலம் விரும்பிகளுக்கும் நன்றி கூறுகிறேன். இளம் வீரர்களை வழிநடத்தி ஊக்குவிப்பதன் மூலம் மேலும் ஊக்கமளிப்பதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

வலிக்கு பின் முதல் சாம்பியன்ஷிப் வெற்றி

"எல்லோரும் நான் சொல்ல விரும்பும் பொதுவான அறிவுரையாக, கீழ் உடல் முடக்கம் ஏற்படும் என்ற கவலை இருந்ததால், தொழில்முறை விளையாட்டுகளை நிறுத்திவிட்டு மாற்றுத் தொழிலை தொடர வேண்டும் என்பதுதான். எனக்கு 20 வயது, வேலை இல்லாமல், நடக்க சுவர் ஆதரவு தேவைப்படும் நிச்சயமற்ற உடலுடன் இருந்தேன்.

வலியின் காரணமாக, நிற்கும்போதோ அல்லது நடக்கும்போதோ என் முதுகு சரிந்துவிடும். வலியைத் தாங்கிக் கொள்வது, மறுவாழ்வைத் தொடர்வது மற்றும் சிறந்ததை நம்புவதுதான் தீர்வு. பயிற்சியாளர் கோபியின் ஆலோசனையுடன், நான் இரட்டையர் பயிற்சிக்கு மாறினேன்.

பிரபஞ்சத்தின் உதவியாலும், கடவுளின் அருளாலும், 2012ஆம் ஆண்டு எனது முதல் தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றேன். பின்னர் சர்வதேச போட்டிகளில் விளையாட முடிந்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியாளர் பயணம்

2021 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில், சிக்கி சுமீத் பேட்மிண்டன் அகாடமி என்ற தனது சொந்த பேட்மிண்டன் அகாடமியைத் திறந்த ரெட்டி, இந்தியாவின் பயிற்சியாளர் குழுவிலும் ஒரு பகுதியாக உள்ளார். 

மேலும் பெண்கள் இரட்டையர் வீராங்கனைகளை உருவாக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். "உலக பேட்மிண்டனில் இந்தியாவை ஒரு சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதில் பங்களிப்பதில் இந்தியாவுக்கு ஒரு நல்ல சொத்தாக இருப்பேன் என்பதற்காக எனது பயிற்சி வாழ்க்கையைத் தொடங்கினேன்" எனவும் கூறியுள்ளார்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.