FIFA worldcup 2022:காயத்தால் அடுத்த 2 போட்டிகளில் பிரேசில் வீரர் நெய்மார் விலகல்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa Worldcup 2022:காயத்தால் அடுத்த 2 போட்டிகளில் பிரேசில் வீரர் நெய்மார் விலகல்

FIFA worldcup 2022:காயத்தால் அடுத்த 2 போட்டிகளில் பிரேசில் வீரர் நெய்மார் விலகல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Nov 26, 2022 11:03 PM IST

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரேசில் நாட்டு நட்சத்திர வீரர் நெய்மாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

செர்பியாவுக்கு எதிரான போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியால் துடித்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார்
செர்பியாவுக்கு எதிரான போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வலியால் துடித்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார்

டாப் அணிகள் அனைத்தும் ஒரு போட்டி விளையாடிவிட்ட நிலையில், அர்ஜென்டினா, ஜெர்மனி அணிகள் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

அதேபோல் நட்சத்திர வீரர்கள் சிலரும் இன்னும் சொல்லிக்கொள்ளும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர். இதையடுத்து பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மாருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அந்த அணி தனது முதல் போட்டியில் செர்பியா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றது. இந்த ஆட்டத்தின்போது 80வது நிமிடத்தில் கோல் அடிக்க முயற்சித்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறிய நிலையில், மருத்துவகுழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர். தற்போது காயத்தின் தாக்கம் குறைவதற்கு நெய்மாருக்கு ஓய்வு தேவை என்பதால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேசில் அணி தனது அடுத்த போட்டியில் ஸ்விட்சர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.