Paul Pogba: ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி! பிரான்ஸ் கால்பந்து வீரர் போக்பா விளையாட தடை
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னிணி கால்பந்து வீரரான பால் போக்பா ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார். டெஸ்டோஸ்டிரோன் என தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சீரிய ஏ தொடரில் ஜுவென்டஸ் - உடினீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த போட்டியில் அவர் அணியில் இடம்பிடித்திருந்தாலும், ஆட்டம் முழுவதும் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது அவர் விளையாடி வரும் ஜூவ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். போக்பாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அவருக்கு செப்டம்பர் 16ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
30 வயதாகும் போக்பா மீதான இந்த குற்றச்சாட்டு உறுதியானால், இரண்டு ஆண்டுகள் வரை அவர் கால்பந்து விளையாட தடை விதிகப்படலாம். 2018ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் முக்கிய வீரராக இருந்தவர் போக்பா.