FIFA world cup 2022: முதல் ‘ரெட் கார்டு’ வாங்கிய வேல்ஸ்… வென்றது ஈரான்!
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ஈரான்.

பிபா 2022 கால்பந்து தொடரில் முதல் ‘ரெட் கார்டு’ காட்டும் நடுவர் (BT Sports Twitter)
உலக ரசிகர்களின் உள்ளத்தில் குடியிருந்து வரும் கால்பந்து ஆட்டத்தின் உலகக்கோப்பை தொடரான பிபா 2022 போட்டிகள், கத்தாரில் தொடங்கி நடந்து வருகிறது.
குழு வாரியாக நடந்து வரும் இப்போட்டியில், ‘பி’ குழுவில் உள்ள வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் நேருக்கு நேர் மோதின. கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள அஹ்மத் பின் அலி அரங்கில் நடந்த இப்போட்டியை காண, பல்லாயிரக்கணக்கானோர் மைதானத்தில் கூடியிருந்தனர்.
