ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் விலகிய வாஷிங்டன் சுந்தர்! மாற்று வீரர் அறிவிப்பு
காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய அணியின் பெளிலிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகளில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. ,முதல் போட்டி வரும் 18ஆம் தேதி இந்திய நேரப்படி 12:45க்கு தொடங்குகிறது. அனைத்து போட்டிகளில் ஹராரே நகரிலுள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தத் தொடரில் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படவுள்ளார்.
இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்த இந்திய அணியின் பெளலிங் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார். இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியபோது அவருக்கு இடது தோளில் காயம் ஏற்பட்டது. தற்போது ஓய்வு தேவை என்பதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடிய ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தரைப் போல் பெளலிங் ஆல்ரவுண்டரான இவர் உள்ளூர் போட்டிகளில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார்.
இடது கை ஸ்லோ ஆர்தோடாக்ஸ் பெளலராகவும், இடது கை பேட்ஸ்மேனாகவும் இருக்கும் ஷபாஸ் முகமது முதல்முறையாக ஒரு நாள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டாபிக்ஸ்