Asia Mixed Team Championships: ஜப்பானுக்கு எதிராக கடுமையான போராட்டம்.. காலிறுதியில் வெளியேறிய இந்தியா
முதல் ஆட்டத்தில் உலகின் 12வது இடத்தில் உள்ள ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஜோடியை எதிர்கொண்ட துருவ் மற்றும் தனிஷா ஜோடி தோல்வி அடைந்த போதிலும், இரண்டாவது ஆட்டத்தில் கம்பேக் கொடுத்தது. அந்த வெற்றியை தக்க வைக்க கடுமையாக போராடிய போதிலும் அது நடக்காமல் போனது.

Qingdao [China], February 14 (ANI): பேட்மிண்டன் ஆசியா கலவை அணி சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள கிங்டாவோவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் கலவை இரட்டையர் ஜோடி துருவ் மற்றும் தனிஷா மற்றும் ஒற்றையர் பிரிவு வீராங்கனையான மாளவிகா பன்சோத் ஆகியோர் இணைந்து ஒரு அணியாக களமிறங்கினார்கள். இந்த தொடரில் தங்களை விட தரவரிசையில் உயர்ந்த இடத்தில் இருந்து ஜோடிகளுக்கு எதிராக முழு ஆட்டத்திறனையும் வெளிப்படுத்தும் விதமாக விளையாடினர். இருந்த போதிலும் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜப்பான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.
61 நிமிடம் நீடித்த மோதல்
முதல் ஆட்டத்தில் உலகின் 12வது இடத்தில் உள்ள ஹிரோகி மிடோரிகாவா மற்றும் நட்சு சைட்டோ ஜோடியை எதிர்கொண்ட இந்தியாவின் துருவ் மற்றும் தனிஷா ஜோடி, முதல் சுற்றில் தோற்றாலும் இரண்டாவது சுற்றில் அதிரடியான சண்டையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. அனுபவம் வாய்ந்த ஜப்பானிய ஜோடிகளுக்கு எதிராக 61 நிமிடம் வரை நீடித்த இந்த போட்டியில் 21-13, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வியை தழுவியது.
இந்த போட்டிக்கு பின்னர் உலகின் 8 ஆம் நிலை வீராங்கனையான டொமோகா மியாசாகியை தடுத்து நிறுத்தும் விதமாக களமிறங்கினார் மாளவிகா. இதில் மாளவிகாவின் முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் போனது. ஜப்பானிய நட்சத்திர ஷட்லர் டோமோகாவுக்கு எதிராக 21-12, 21-19 என்ற நேர் செட்களில் கணக்கில் தோல்வியடைந்தார்.
