Karthigai deepam: ஆப்பு வைக்க போகும் கார்த்திக்.. சந்திரகலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்
கார்த்திக் விபத்து நடந்த இடத்திற்கு வருகிறான். அதற்கு முன்பாக அங்கு வந்த மாயா ஏசியில் இருந்து குளோரோபாரம்மை எடுத்து விட்டு ஒளிந்து கொள்கிறாள். அடுத்து மாயா வீட்டிற்கு வர மகேஷ் என்னாச்சு என்று கேட்க மாயா நடந்ததை சொல்கிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்
(1 / 5)
வீடியோ ஆதாரத்துடன் ஆப்பு வைக்க போகும் கார்த்திக்.. சந்திரகலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் கார்த்திக் டாக்டருக்கு விபத்து நடந்த இடத்திற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
(2 / 5)
அதாவது, கார்த்திக் விபத்து நடந்த இடத்திற்கு வருகிறான். அதற்கு முன்பாக அங்கு வந்த மாயா ஏசியில் இருந்து குளோரோபாரம்மை எடுத்து விட்டு ஒளிந்து கொள்கிறாள்.
அடுத்து மாயா வீட்டிற்கு வர மகேஷ் என்னாச்சு என்று கேட்க மாயா நடந்ததை சொல்கிறாள். நல்லவேளை கார்த்திக் மட்டும் உன்னை பார்த்து இருந்தா நேரா இங்க வந்து பிரச்சனை செய்து இருப்பான், .
(3 / 5)
துருவி துருவி கேள்வி கேட்டு சிக்க வைத்து இருப்பான் என்று சொல்கிறாள்.
மறுபக்கம் கார்த்திக் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகிறான், மயில்வாகனத்திடம் காரை தரவா செக் பண்ணிட்டேன், எதுவுமே இல்ல. ஆனால் இந்த விஷயத்தில் சந்திரகலா, சிவனாண்டி மட்டுமில்லாமல் இன்னொரு லேடியும் சம்மந்தப்பட்டு இருக்காங்க. அதை கண்டுபிடிக்கணும் என சொல்கிறான்.
(4 / 5)
அதன் பிறகு சந்திரகலா சிவனாண்டியை சந்திக்க வர கார்த்திக் அவளை பின்தொடர்ந்து வருகிறான், சந்திரகலா சிவனாண்டி சந்தித்து கொண்டு கார்த்திக் குறித்து பேச மறைந்திருந்து நோட்டமிடும் கார்த்திக் இதை வீடியோவாக எடுக்கிறான்.
மற்ற கேலரிக்கள்