செவ்வாய் கிழமை வழிபாடு! இந்த தெய்வங்களை வணங்கினால் செல்வம் பெருகும்! வளம் கொழிக்கும்!
நீங்கள் நினைத்தது நிறைவேறவும், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கவும் செவ்வாய்க் கிழமையில் வீட்டில் பூஜை செய்ய வேண்டும் என இந்து மதத்தில் கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யும் பூஜையினால் இறைவன் நமக்கு வேண்டியதை அருள்கிறார்.
(1 / 5)
செவ்வாய் பகவான், வீடு, நிலம், சொத்து ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்பது அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானை வழிபட்டால் வீடு, வாகன யோகம் அமையும். அதை வித முக்கியமானது செவ்வாய் பகவான் தான் ரத்தம் தொடர்பான நோய்களுக்கும் காரணமானவர். இவரே உடல் வலிமை, தைரியம் ஆகியவற்றிற்கும் காரணமான கிரகமாக கருதப்படுகிறார்.
(2 / 5)
செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை வேண்டி எந்த வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் அது நிச்சயம் பலன் தரும். செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு, பைரவர் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
(3 / 5)
செவ்வாய்க் கிழமை துர்க்கை அம்மனுக்கு உகந்த ஒரு நாளாகும். இந்த நாளில் துர்க்கைக்கு பூஜை செய்து துர்க்கை மந்திரம் சொல்லி ஆராதனை செய்ய வேண்டும். இதனை ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் செய்து வந்தால் அம்மனின் அருள் நமக்கு கிடைக்கும். இதனால் வீட்டில் நிறைவேறாமல் இருந்த சுப காரியங்கள் சட்டென நிறைவேறும்.
(4 / 5)
ராமனின் சேவகனான அனுமனை வணங்கினால் செவ்வாய்க் கிழமை பூஜை நிறைவடையும். அவரின் அளப்பரிய சக்தி நமக்கு நன்மை பயக்கும். அனுமன் வழிபாட்டில் எப்போதும் ஏதேனும் படையல் இருக்க வேண்டும். அப்போது தான் இந்த பூஜை நிறைவடையும். உங்கள் வீட்டில் அனுமன் சிலையோ, புகைப்படமோ இருந்தால் வடை மாலை சாத்தி வழிபடுங்கள்.
மற்ற கேலரிக்கள்