தண்ணீர் குடிக்க வந்து கான்கிரீட் இடையே சிக்கிய யானை.. ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்பு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தண்ணீர் குடிக்க வந்து கான்கிரீட் இடையே சிக்கிய யானை.. ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்பு

தண்ணீர் குடிக்க வந்து கான்கிரீட் இடையே சிக்கிய யானை.. ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்பு

Jan 05, 2025 08:34 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 05, 2025 08:34 PM , IST

  • கர்நாடக மாநிலம் நாகர்ஹோளே வனப்பகுதியின் ஓரத்தில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை, கான்கிரீட் தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு யானை மீட்கப்பட்டது

மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில் உள்ள முதுகனூர் ஹோசகெரே என்ற பகுதிக்கு அருகே கான்கிரீட் சுவருக்கு இடையே யானை சிக்கியது

(1 / 6)

மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில் உள்ள முதுகனூர் ஹோசகெரே என்ற பகுதிக்கு அருகே கான்கிரீட் சுவருக்கு இடையே யானை சிக்கியது

நாகர்ஹோளே சரணாலயத்தில் காட்டு பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, மீண்டும் காட்டுக்குள் திரும்பும் போது தடுப்பாக போடப்பட்டிருந்த கான்கிரீட் தூணில் சிக்கி கொண்டது

(2 / 6)

நாகர்ஹோளே சரணாலயத்தில் காட்டு பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, மீண்டும் காட்டுக்குள் திரும்பும் போது தடுப்பாக போடப்பட்டிருந்த கான்கிரீட் தூணில் சிக்கி கொண்டது

சுமார் மூன்று மணி நேரமாக வெளியே வர முடியாமல் தவித்த காட்டு யானை தொடர்ந்து தப்பிக்க முயன்றது. யானை போராடுவதை பார்த்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

(3 / 6)

சுமார் மூன்று மணி நேரமாக வெளியே வர முடியாமல் தவித்த காட்டு யானை தொடர்ந்து தப்பிக்க முயன்றது. யானை போராடுவதை பார்த்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்

வனப்பகுதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்களுக்கு இடையே காட்டு யானைகள் அவ்வப்போது சிக்கி சிரமப்படும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது

(4 / 6)

வனப்பகுதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்களுக்கு இடையே காட்டு யானைகள் அவ்வப்போது சிக்கி சிரமப்படும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது

இந்த ஒற்றை யானை காட்டில் இருந்து கிராமத்துக்கு வந்து, பயிர்களை நாசம் செய்து வந்த நிலையில், யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது

(5 / 6)

இந்த ஒற்றை யானை காட்டில் இருந்து கிராமத்துக்கு வந்து, பயிர்களை நாசம் செய்து வந்த நிலையில், யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது

வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் தூணை அகற்றினர். ஒரு வழியாக தூணில் சிக்கியிருந்த யானை பின்னர் தப்பித்து காட்டை நோக்கி ஓடியது

(6 / 6)

வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ஜேசிபி இயந்திரம் மூலம் தூணை அகற்றினர். ஒரு வழியாக தூணில் சிக்கியிருந்த யானை பின்னர் தப்பித்து காட்டை நோக்கி ஓடியது

மற்ற கேலரிக்கள்